மனித படைப்பு பற்றி திருக்குர்ஆன்

ஏக இறைவனின் திருப்பெயரால்..

மனிதனின் ஆரம்ப படைப்பு பற்றி திருக்குர்ஆனின் கூற்று....

மண்ணிலிருந்து மனிதனை இறைவன் படைத்தாக திருக்குர்ஆன் கூறுகிறது இந்த கருத்து அந்த காலத்தில் வாழ்ந்த மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ஒரு புதுமையான தகவலாக உள்ளது...

அன்றைய அரேபிய மக்கள் விஞ்ஞானிகளும் அல்ல...

விஞ்ஞானம் வளர்ந்து மனித படைப்பை ஆய்வு செய்யும் வரை குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்பது அனைவரின் முடிவாக இருந்தது...

ஆனால் இன்று விஞ்ஞானத்தால், இந்த நூற்றாண்டின் கண்டுப்பிடிக்கப்பட்ட பெரிய கண்டுப்பிடிப்பு மனிதனின் படைப்பு...

விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு செல்வதற்க்கு முன் மனித படைப்பை குர்ஆன் ஒரு வரியில் இரத்திணச்சுருக்கமாக சொன்ன செய்தியை பார்ப்போம்...

திருக்குர்ஆன்
அல் முஃமினூன் (23) வது அத்தியாயம் வசனம் 12.

 وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.
திருக்குர்ஆன்  23:12

இதில் முதல் மனிதனை மன்னிலிருந்து படைத்ததாக குர்ஆன் சொல்கிறது...

குர்ஆன் 1400 வருடங்களாக இதே கருத்தில் தான் உள்ளது, மாற்றப்படவில்லை..

இதைப்பற்றி விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

விஞ்ஞானிகளின் ஆய்வு குர்ஆனோடு உடன்படுகிறதா?
முரன்படுகிறதா? மனித படைப்பு பற்றி விஞ்ஞானிகளின் ஆய்வு என்ன என்பதை பார்ப்போம்...

எனது இந்த ஆய்வுகள் அனைத்தும் முழுக்க, முழுக்க விஞ்ஞானிகளால் நிறுபிக்கப்பட்ட உண்மைகள்...

ஒவ்வொரு தகவலையும் இணையதளத்தில் கூகுளில் சென்று நீங்கள் சரி பார்க்கலாம்..

குர்ஆனின் இந்த தகவலை 1400 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் நம்பி வருகின்றனர்...

குர்ஆன் பொய் சொல்லாது அதில் உள்ள கருத்து உண்மை என்று நம்பினர்...

அன்றைய தொழில்நுட்பம் வளராத காலத்தில் பலர் குர்ஆனின் இந்த தகவலை பொய் என்று விமர்சனம் செய்து வந்தனர்...

மண்ணிலிருந்து நேரடியாக மனிதனை படைத்து உயிரூட்டப்பட்டது சாத்தியமில்லாதது என்பதற்காக பல காரணங்களை முன்வைத்து, குர்ஆனின் இந்த வசனத்தை புறக்கனித்தனர்..

குர்ஆன் இறுதி இறைவேதம், இது முகமது நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது,
அதே போல முகமது நபி(ஸல்) அவர்களுக்கு முன் வந்த இறைத்தூதர்கள் கொன்டுவந்த பைபிள் என்றழைக்கப்படும் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு.

பழைய ஏற்பாடு அரபியில்(தவ்ராத்) இது இறைத்தூதர் மோசே(மூஸா) அவர்களுக்கு வழங்கப்பட்டது,
புதிய ஏற்பாடு(இஞ்சில்) இறைத்தூதர் இயேசு(ஈஸா) அவர்களுக்கு வழங்கப்பட்டது...

அரபியில் ஏக இறைவனை அல்லாஹ் என்றழைக்கிறோம்...

கிருஸ்தவர்கள் பிதா,தேவன் என்றழைப்பார்கள்...

இஸ்லாமியர்கள் ஏக இறைவன் ஒருவனை மட்டும் வணங்குவார்கள்,
கிருஸ்தவர்கள் அந்த ஏக இறைவனின் திருத்தூதர் இயேசு(ஈஸா) அவர்களை இறைவனின் பிள்ளை என்று கற்பனையாக உருவாக்கி வணங்குகிறார்கள்...

குர்ஆன் ஆதாரம்:
தமக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின்(மேரி) மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம்.
அவருக்கு இஞ்சீலையும்(புதிய ஏற்பாடு) வழங்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தது. தனக்கு முன்சென்ற தவ்ராத்தை(பழைய ஏற்பாடு) உண்மைப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது. இறைவனை அஞ்சுவோருக்கு நேர்வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது.
திருக்குர்ஆன்  5:46
இந்த வசனத்தில் இயேசு இறைத்தூதர் என்று சொல்லப்பட்டுள்ளது..

அதே போல் பைபிளில் இறைவன் ஒருவன் என்பதற்கான சான்று.

பைபிள் ஆதாரம்:
உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.
மத்தேயு 4:10

இன்னும் பல வசனங்கள் உள்ளன,
இதை பிறகு பார்ப்போம்...

இந்த தகவலை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்?

முஸ்லிம்கள் குர்ஆன் எங்கிருந்து அருளப்பெற்றதோ..!
அங்கிருந்து தான் பழையஏற்பாடு(தவ்ராத்) மற்றும் புதியஏற்பாடு(இஞ்சில்) தற்பொழுது பைபிள் என்றழைக்கப்படும் இந்த வேதமும் வந்தது என்று ஆழமாக நம்புகின்றனர்...

ஆனால் இப்பொழு உள்ள பைபிள் பல திருத்தங்கள் மனிதனால் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது..

அதனால் இறைவன் முகமது நபி(ஸல்) அவர்களுக்கு எப்படி படைப்பை பற்றி சொல்லி தந்தானோ,
அதே போல முகமது நபி(ஸல்) அவர்களுக்கு முன் சென்ற இறைத்தூதர்களும் சொல்லியுள்ளான் என்பதை விளங்கிகொள்ளலாம்...

அதனால் தான் பைபுளும் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை சொல்கிறது...

அதன் ஆதாரம்:
ஆதியாகமம் 2:7
கர்த்தராகிய தேவன் தரையிலே புழுதியிலே மனுஷனை உண்டாக்கி, ஜீவபூமியின் மூக்கினால் மூச்சுத்தி, மனுஷன் ஜீவாத்துமாவானான்."

இந்த வசனம் மண்ணால் படைக்கப்பட்டது என்பதை குறிக்கிறது...

மண்ணின்
'மூல'சத்திலிருந்து படைக்கபட்டான் மனிதன்

மண்ணையும், மனிதனையும் ஆய்வு செய்த போது இரண்டின் மூலங்களும் ஒரே பண்புடையதாக இருக்கிறது,

எனவே மண்ணின் மூலப் பொருள்களை எடுத்துதான் மனிதன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள்.

அவர்கள் இந்த முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மண்ணிற்கும் மனிதனுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் வேதியில் தனிமங்கள் (Chemistry elements):
1.பிராணவாய்வு(Flatulence
2.கால்சியம்(Calcium) 3.பொட்டாசியம்(Potassium)
4.உப்பு(Salt)
5.கார்பன்(Carbon)
6.ஹைட்ரஜன்(Hydrogen)
7.பாஸ்பரஸ்(Phosphorus)
8.கந்தகம்(Brimstone)
9.சோடியம்(Sodium)
10.நைட்ரஜன்(Nitrogen)
11.குளோரின்(Chlorine) 12.மெக்கினீசியம்( Magnesium)
12.இரும்பு(Iron)
13.செம்பு(Copper) போன்றவைகளாகும்.

இது மண்ணிலிருக்கும் தனிம பொருட்கள்...

இந்த தனிம கலவை ஏன் மனிதனோடு ஒத்து அமைந்துள்ளது...?

இறைவனை பொருத்த வரை அவன் நினைத்தால் அது நடக்கும்...

எந்த பொருளை படைக்க நாடுகிறானோ,!
அதை அவன் தனது ஆற்றல் மூலம் எளிமையாக படைப்பான்.

بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَإِذَا قَضَىٰ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ

அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன்.
ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து "ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.
திருக்குர்ஆன்  2:117

இந்த வசனத்தில் உள்ளது போல "ஆகு" என்று சொன்னால் அது ஆகிவிடும்...

ஆனால் இறைவன் தன்னை  யார் என்று மனிதர்கள் தெறிந்துகொள்வதற்காக படைப்பின் ரகசியத்தை தனது தூதர்கள் மூலம் வேதங்களின் வழியாக  இப்படி அதன் உருவாக்கத்தை நமக்கு சொல்லி காட்டுகிறான்...

ஆனால் இறைவனின் அருள்மறை குர்ஆனையும் நபிமொழியினையும் படித்துப் பார்த்தால் இது புது கருத்தல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்ட ஒரு தகவல் ஆகும். அந்த உண்மையை புரிந்து கொள்வதற்குதான் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.

மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம், களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள் மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர். உண்மை அது அல்ல. மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது...

மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்தி குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப் பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து முடியும்..

ஆனால், அதை எப்படி புறிந்துகொள்வது..?
அதில் தான் நமது பகுத்தறிவுக்கான வேலை...

குர்ஆன் அதை தெளிவாக சொல்கிறது, நமது புறிதலில் மட்டுமே இதை சிந்திக்க முடியும்..!

மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும், மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் குர்ஆனில்  கூறப்பட்டுள்ளது.

1.இது களிமண்ணால் படைக்கப்பட்ட தகவல்,

هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ
அவன் தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.
திருக்குர்ஆன் 6: 2

2.இது சாதாரண மண்ணில் படைத்தோம் என்ற தகவல்,

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ
மண்ணால் உங்களைப் படைத்து பின்னர் நீங்கள் மனிதர்களாகப் பரவி இருப்பது அவனது சான்றுகளில் உள்ளவை.
திருக்குர்ஆன்  30:20

குர்ஆனில் ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது 'தீன்' (களிமண்) என்ற வார்த்தையை 6 முறையும், 'துராப்' (சாதாரண மண்) என்ற வார்த்தையை 6 முறையும் பயன்படுத்தி இறைவன் கூறியுள்ளான். இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும், சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல.

14.சிலிக்கன்
15.ருபீடியம்
16.ஸ்ட்ரோன்ட்டியம்
17.ப்ரோமின்
18.ஈயம்
19.தாமிரம்
20.அலுமினியம்
21.காட்மியம்
22.செரியம்
23.பேரியம்
24.அயோடின்
25.தகரம்
26.டைட்டானியம்
27.போரான்
28.நிக்கல்
29.செனியம்
30.குரோமியம்
31.மக்னீசியம்
32.ஆர்சனிக்
33.லித்தியம்
34.செஸியம்
35.பாதரசம்
36.ஜெர்மானியம்
37.மாலிப்டினம்
38.கோபால்ட்
39.ஆண்டிமணி
40.வெள்ளி
41.நியோபியம்
42.ஸிர்கோனியம்
43.லத்தானியம்
44.கால்ஷியம்
45.டெல்லூரியம்
46.இட்ரீயம்
47.பிஸ்மத்
48.தால்வியம்
49.இண்டியம்
50.தங்கம்
51.ஸ்காண்டியம்
52.தண்தாளம்
53.வாளடியம்
54.தோரியம்
55.யுரேனியம்
56.சமாரியம்
57.பெல்யம்
58.டங்ஸ்டன்
59.ஃபுளூரின்
60.துத்தநாகம் இப்படி மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 60 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.

இந்த 60 தனிமங்களும் களிமண்,மண் இரண்டிலும் உள்ள தனிமங்கள்.

இது மண்ணுடைய மூலக்கூறு இதற்க்கும் மனித படைப்புக்கும் சம்மந்தமில்லாமலா..!
இவ்வளவு தனிமங்கள் மனித உடலில் உள்ளது..?

இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும், சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல.

சில மாறுபட்ட பயன்களை தரக்கூடியது. இந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதுவும் சரிசம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும், சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படை.

இந்த இருவகை மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்து, அந்த உருவத்தில் உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லை.

மாறாக இந்த இரு வகை மண்ணின் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி, அந்த கலவையிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான 'மூல' த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான் முதல் மனிதன் படைக்கப்பட்டான்.

இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லை.
மனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள், நாம் எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறது.

மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப் பார்த்தால், இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ ۖ وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِن طِينٍ

அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்.
திருக்குர்ஆன்  32:7

இந்த வசனத்தில் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.

களி மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்ததாக கூறப்பட்டுள்ளது,

அடுத்து எந்தந்த நிலையை அடைந்து, அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த வசனங்களின் மூலம் இறைவன் குர்ஆனில் தெளிவாக கூறுகிறான்.

فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ

இவர்கள் வலிமையான படைப்பா? அல்லது நாம் படைத்த(மற்ற)வைகளா? என்பதை இவர்களிடம் கேட்பீராக!
இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால் நாம் படைத்தோம்.
திருக்குர்ஆன்  37:11

இது மனித படைப்பின் இரண்டாவது நிலை,

பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்?
களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி விடுகிறது.
இந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது.

மனித படைப்பின் மூன்றாவது நிலை:

أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?
திருக்குர்ஆன்  21:30

உயிருள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தண்ணீர் ஒரு 'மூல' காரணமாக அமைகின்றது என்பதை இந்த வசனத்தில் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

மனிதன் உடலமைப்பில் 75 சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது.

எவ்வளவு காலம் என்பது இறைவனுக்கு மட்டும் தெரிந்த விஷயம்.

இது நான்கவது நிலை:

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ
கருப்புக் களிமண்ணில் இருந்து -
மணல் கலந்த களிமண்ணில் இருந்து  மனிதனைப் படைத்தோம்.
திருக்குர்ஆன்  15:26

இதில் கருப்பு களிமண் حَمَإٍ  "ஹம"என்ற வார்த்தை பயன் படத்தப்பட்டுள்ளது,

களிமண் எப்பொழது கருப்பாக மாறும் என்றால் தண்ணீரையும் சாதாரண மண்ணையும் கலக்கி நிண்ட நாட்கள் வைத்திருந்தால் கருப்பாக மாறும்.

உதாரணம்: கால்வாய், கால்வாயின் நிறம் கருப்பாக எப்படி மாறுகிறது?
கருப்பு நிறத்தில் உள்ள மண்களை ஆய்வு செய்தால் அவை எப்படி கருப்பு நிறத்தில் மாறியது என்று தெளிவாக தெறியும்...

நீண்ட நாட்கள் களிமண்,சாதாரண மண் லேசான நீர் இவை கலப்பதால் இவை கருப்பு நிறமாக மாறுகிறது...

பிறகு இந்த கலவையை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது...

மனித படைப்பின் நான்காவது நிலை:

خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ
மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் மனிதனைப் படைத்தான்.
திருக்குர்ஆன்  55:14

களிமண்,சாதாரணமண்,நீர் இவைகளின் கலவை அனைத்திற்க்கும் சூடேற்றப்படுகிறது, பிறகு இறைவன் தனது ஆற்றல் மூலம் முதல் மனிதனுகக்கு உயிர் கொடுக்கிறான்...

அதற்கான குர்ஆன் ஆதாரம்:

إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ اللَّهِ كَمَثَلِ آدَمَ ۖ خَلَقَهُ مِن تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُن فَيَكُونُ
அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதம் ஆவார். அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
திருக்குர்ஆன்  3:59

படைப்பாளனின் ஆற்றலால் "ஆகு" என்றவுடன் முதல் மனிதன் மனிதனாக ஆகிவிட்டான், அவர் தான் ஆதம்(அலை).

இதன் பிறகு ஆதம்(அலை) அவர்களுக்கான ஜோடிையை ஹவா(ஏவாள்)வை படைத்தான்.

خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ ۚ
உங்களை ஒரே ஒருவரிலிருந்து
அவன் படைத்தான்.
பின்னர் அவரிலிருந்து அவரதுஜோடியைப் படைத்தான்.
திருக்குர்ஆன்  39:6

இதன் பிறகு மனித இனம் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிறது.

இவ்வளவு துள்ளியமாக மணித படைப்பை பற்றி திருக்குர்ஆன் விவரிக்கிறது.

மனிதன் மண்ணிலிருந்துதான் உருவாகினான் என்பதை விஞ்ஞானிகள் மறுக்கவில்லை.

மனிதன் மண்ணிலிருந்துதான் உருவாக்கப்பட்டதால்தான் மண்ணின் மூலக்கூறு மனித உடலமைப்பில் உள்ளது...

திருக்குர்ஆன் இறைவனின் வார்தை என்பதற்கு இதுவும் ஒரு சான்று

ஆக்கம்
அ.மன்சூர் வேலூர்

Comments